
Sunday, 13 September 2009
Wednesday, 2 September 2009
Sunday, 16 August 2009
Tuesday, 4 August 2009
Monday, 3 August 2009
Thursday, 30 July 2009
Saturday, 25 July 2009
Wednesday, 22 July 2009
Sunday, 12 July 2009
Saturday, 11 July 2009
Saturday, 4 July 2009
Monday, 29 June 2009
அச்சப் பூனை - நஜி
முஸ்டியை மடக்கி
பாய்ந்து
முகத்தில்
குத்தச் சொல்கிறது
வெறி கொண்ட மனசு...
எதிரியின் பலம் நினைத்து...
நெஞ்சத்தின் இடுக்கில்
பதுங்கி நிற்கிறது
அச்சப் பூனை...
பாய்ந்து
முகத்தில்
குத்தச் சொல்கிறது
வெறி கொண்ட மனசு...
எதிரியின் பலம் நினைத்து...
நெஞ்சத்தின் இடுக்கில்
பதுங்கி நிற்கிறது
அச்சப் பூனை...
மனம் - நஜி
என்றோ..
மெல்லிருளில்
பதட்டத்தோடு கண்டெடுத்த
பத்து ரூபாய்..
இடத்தை கடக்கும் போதெல்லாம்
துலாவி துலாவி
திரிகின்றன கண்கள்
எள்ளி நகைக்கிறது
மனம்...
மெல்லிருளில்
பதட்டத்தோடு கண்டெடுத்த
பத்து ரூபாய்..
இடத்தை கடக்கும் போதெல்லாம்
துலாவி துலாவி
திரிகின்றன கண்கள்
எள்ளி நகைக்கிறது
மனம்...
Saturday, 27 June 2009
Tuesday, 23 June 2009
வார்த்தைகள் - நஜி
என்
ஆழ்ந்த மௌன அணையின்
பின்னே..
தளும்பி நிற்கும்
உக்கிர வார்த்தைகள்..
எப்பொழுதாவது
உடைப்பெடுத்து..
காற்றாற்று
வெள்ளமென
அடித்துச் செல்லும்..
சில நேரங்களில் உன்னை..
சில நேரங்களில் என்னை..
சில நேரங்களில் நம்மை..
ஆழ்ந்த மௌன அணையின்
பின்னே..
தளும்பி நிற்கும்
உக்கிர வார்த்தைகள்..
எப்பொழுதாவது
உடைப்பெடுத்து..
காற்றாற்று
வெள்ளமென
அடித்துச் செல்லும்..
சில நேரங்களில் உன்னை..
சில நேரங்களில் என்னை..
சில நேரங்களில் நம்மை..
Monday, 22 June 2009
இது ஹைக்கூ.... வா?????? - நஜி
முழு நிலவு
==================
வானத்
தெரு விளக்கு..
தமிழ்ப் படங்கள்
==================
மறு ஒலிபரப்பு
செருப்பு
==================
கைகளுக்கு...
கால்கள் இல்லாத
பிச்சைக்காரனுக்கு..
==================
வானத்
தெரு விளக்கு..
தமிழ்ப் படங்கள்
==================
மறு ஒலிபரப்பு
செருப்பு
==================
கைகளுக்கு...
கால்கள் இல்லாத
பிச்சைக்காரனுக்கு..
Saturday, 20 June 2009
Monday, 15 June 2009
பகலெனும் ராட்சஸன் - நஜி
Wednesday, 10 June 2009
தன்னழிப்பு - ஆதவன் தீட்சண்யா
சிதைத்த கானகவெளியில்
நீர்நிலைகள் தூர்த்து
நிர்மாணித்த நகரங்களில்
இப்போது
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்
சந்தடியற்று
தனிமையின் அமைதியில் தோய்ந்து
சூரிய சந்திர ஒளி குளித்து
மாசற்றக் காற்றில் தலைதுவட்ட
வேறு வனங்களையழித்து
புறநகர் பகுதியொன்றில்
ஒவ்வொருவராய் குடியேறிய பின் கிளம்பியது புகார்:
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்.
நன்றி : கீற்று
நீர்நிலைகள் தூர்த்து
நிர்மாணித்த நகரங்களில்
இப்போது
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்
சந்தடியற்று
தனிமையின் அமைதியில் தோய்ந்து
சூரிய சந்திர ஒளி குளித்து
மாசற்றக் காற்றில் தலைதுவட்ட
வேறு வனங்களையழித்து
புறநகர் பகுதியொன்றில்
ஒவ்வொருவராய் குடியேறிய பின் கிளம்பியது புகார்:
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்.
நன்றி : கீற்று
முன்னொரு முறை..- நஜி
முன்னொரு முறை..
பிறந்த புதிதில்..
பிரபஞ்ச வீட்டின்..
வாணத் தரையின்..
நீல நிற விரிப்பின் மேல்..
மேகப் பஞ்சணையில்
தலை வைத்து
படுத்துக் கொண்டு
விட்டத்தின்
வட்ட வடிவ
நிலா ஓட்டையின்
வழியே..
வேறொரு
வெள்ளை நிற
சமாதானத்தின்
உலகை
பார்த்திருக்கிறேன்
நான்..
பிறந்த புதிதில்..
பிரபஞ்ச வீட்டின்..
வாணத் தரையின்..
நீல நிற விரிப்பின் மேல்..
மேகப் பஞ்சணையில்
தலை வைத்து
படுத்துக் கொண்டு
விட்டத்தின்
வட்ட வடிவ
நிலா ஓட்டையின்
வழியே..
வேறொரு
வெள்ளை நிற
சமாதானத்தின்
உலகை
பார்த்திருக்கிறேன்
நான்..
Tuesday, 9 June 2009
உதிரிகள் - கலாப்ரியா
இரவில் எடுத்து
வந்து
நன்றாகப் பார்க்கும் முன்
வரும் வழியிலேயே
தைக்கப் போட்டு விட்ட
சட்டைத் துணி
எவ்வாறெல்லாமோ
தினம் தினம்
நினைவுக்கு வரும்
தீபாவளி வரை
நன்றி : http://kalapria.blogspot.com/
வந்து
நன்றாகப் பார்க்கும் முன்
வரும் வழியிலேயே
தைக்கப் போட்டு விட்ட
சட்டைத் துணி
எவ்வாறெல்லாமோ
தினம் தினம்
நினைவுக்கு வரும்
தீபாவளி வரை
நன்றி : http://kalapria.blogspot.com/
Monday, 8 June 2009
Saturday, 6 June 2009
கதவு - கவிக்கோ அப்துல் ரகுமான்
பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன
கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்
கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன
பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல
கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது
கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்
மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது
நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்
ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா
கதவு தட்டும்
ஓசை கேட்டால்
‘யார்' என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன
கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்
கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன
பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல
கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது
கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்
மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது
நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்
ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா
கதவு தட்டும்
ஓசை கேட்டால்
‘யார்' என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்
Wednesday, 3 June 2009
நீரடியில் கொலைவாள் - மனுஷ்யபுத்திரன்
நீரடியில் கிடக்கிறது
கொலைவாள்
இன்று இரத்த ஆறுகள்
எதுவும் ஓடவில்லை
எனினும்
ஆற்று நீரில் கரிக்கிறது ரத்தருசி
இடையறாத
நதியின் கருணை
கழுவி முடிக்கட்டுமென்று
நீரடியில் கிடக்கிறது
கொலைவாள்
நன்றி: உயிர்மை - http://www.uyirmmai.com/
கொலைவாள்
இன்று இரத்த ஆறுகள்
எதுவும் ஓடவில்லை
எனினும்
ஆற்று நீரில் கரிக்கிறது ரத்தருசி
இடையறாத
நதியின் கருணை
கழுவி முடிக்கட்டுமென்று
நீரடியில் கிடக்கிறது
கொலைவாள்
நன்றி: உயிர்மை - http://www.uyirmmai.com/
Thursday, 28 May 2009
தேவதச்சன் கவிதைகள்.
ஒரு வண்ணத்துபூச்சி
நான்
உயர்நிலைப் பள்ளியில் நுழைந்த போது கூடவே
ஒரு வண்ணத்துப்பூச்சி நுழைந்தது
அது மஞ்சள் நிறத்தில் இருந்தது
அப்போது என் வயது பத்து
பொறுமையற்ற வருடங்கள் கழித்து
நான் வெளியேறியபோது
என் இடது தோளின் மேலாகப் பறந்து
வெளியேறியது . அப்போதும்
அது மஞ்சளாகவே இருந்தது
நரைக்கூடிக் கிழப்பருவம் எய்தி
கடவுள் தன் ரகசியங்களை மாட்டி வைத்திருக்கும்
ஆலமரத்தின் அருகில் நிற்கும்போது என்
முகத்தின் குறுக்காக விரைந்து சென்றது
அப்போதும் அது மஞ்சளாகவும் சிறியதாகவும்
இருந்தது.
தன் இரண்டு ஜன்னல்களைத்
திறந்து அலைபாயும் மஞ்சள் கடலைக் காட்டும்
வண்ணத்துப்பூச்சி
என்னைப்பற்றி
என்ன கதையடிக்கும்.
**
மழை
மழையின்
பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது
**
அன்பின் சிப்பி
என் அன்பின் சிப்பியை
யாரும் திறக்க
வரவில்லை
கடல்களுக்குக் கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஒட்டமும் நடையுமாய்.
**
குருட்டு ஈ
ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப்
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை
**
பரிசு
என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுகள்
**
அன்பின் எழுத்துகள்
எங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை
யாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று
வேண்டும் எனக்கு. சின்ன
குருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு
உன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்
எங்கு இருக்கிறது அது
எங்கும் இல்லை
என் நினைவுகளில் அது வளரட்டும் என்று
கடந்து செல்லும் அந்திக் காற்றில்
விட்டுவிடச் செல்கிறேன்
என் உடலிலிருந்து நீண்டு செல்கிறது
உன் நிழல்
வெளியே வெளியே தெரிந்தாலும்
நிழல்கள்
ஒளிந்திருப்பதற்கு
உடலைத் தவிர வேறு இடம்
ஏது
**
நன்றி: www.sramakrishnan.com
நான்
உயர்நிலைப் பள்ளியில் நுழைந்த போது கூடவே
ஒரு வண்ணத்துப்பூச்சி நுழைந்தது
அது மஞ்சள் நிறத்தில் இருந்தது
அப்போது என் வயது பத்து
பொறுமையற்ற வருடங்கள் கழித்து
நான் வெளியேறியபோது
என் இடது தோளின் மேலாகப் பறந்து
வெளியேறியது . அப்போதும்
அது மஞ்சளாகவே இருந்தது
நரைக்கூடிக் கிழப்பருவம் எய்தி
கடவுள் தன் ரகசியங்களை மாட்டி வைத்திருக்கும்
ஆலமரத்தின் அருகில் நிற்கும்போது என்
முகத்தின் குறுக்காக விரைந்து சென்றது
அப்போதும் அது மஞ்சளாகவும் சிறியதாகவும்
இருந்தது.
தன் இரண்டு ஜன்னல்களைத்
திறந்து அலைபாயும் மஞ்சள் கடலைக் காட்டும்
வண்ணத்துப்பூச்சி
என்னைப்பற்றி
என்ன கதையடிக்கும்.
**
மழை
மழையின்
பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது
**
அன்பின் சிப்பி
என் அன்பின் சிப்பியை
யாரும் திறக்க
வரவில்லை
கடல்களுக்குக் கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஒட்டமும் நடையுமாய்.
**
குருட்டு ஈ
ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப்
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை
**
பரிசு
என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுகள்
**
அன்பின் எழுத்துகள்
எங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை
யாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று
வேண்டும் எனக்கு. சின்ன
குருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு
உன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்
எங்கு இருக்கிறது அது
எங்கும் இல்லை
என் நினைவுகளில் அது வளரட்டும் என்று
கடந்து செல்லும் அந்திக் காற்றில்
விட்டுவிடச் செல்கிறேன்
என் உடலிலிருந்து நீண்டு செல்கிறது
உன் நிழல்
வெளியே வெளியே தெரிந்தாலும்
நிழல்கள்
ஒளிந்திருப்பதற்கு
உடலைத் தவிர வேறு இடம்
ஏது
**
நன்றி: www.sramakrishnan.com
Wednesday, 27 May 2009
தீக்குளியள் - கவிக்கோ அப்துல் ரகுமான்
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியா
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்ட
அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியா
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்ட
அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும
Saturday, 16 May 2009
Thursday, 12 March 2009
நடு நிசி - நஜி
பொழுது போகாத
நடு நிசி ஒன்று..
தன் மாயக் கரங்களால்
என்னை...
தரையின் மீது உருட்டி
விளையாடுகிறது தாயம்
நடு நிசி ஒன்று..
தன் மாயக் கரங்களால்
என்னை...
தரையின் மீது உருட்டி
விளையாடுகிறது தாயம்
Wednesday, 11 March 2009
Subscribe to:
Posts (Atom)