நீரடியில் கிடக்கிறது
கொலைவாள்
இன்று இரத்த ஆறுகள்
எதுவும் ஓடவில்லை
எனினும்
ஆற்று நீரில் கரிக்கிறது ரத்தருசி
இடையறாத
நதியின் கருணை
கழுவி முடிக்கட்டுமென்று
நீரடியில் கிடக்கிறது
கொலைவாள்
நன்றி: உயிர்மை - http://www.uyirmmai.com/
No comments:
Post a Comment