Wednesday, 10 June 2009

தன்னழிப்பு - ஆதவன் தீட்சண்யா

சிதைத்த கானகவெளியில்

நீர்நிலைகள் தூர்த்து
நிர்மாணித்த நகரங்களில்

இப்போது

வெளிச்சமில்லை

காற்றில்லை

நீரில்லை

நெரிக்கும் கூட்டம்

சத்தம்

இரைச்சல்

சண்டைகள்


சந்தடியற்று
தனிமையின் அமைதியில் தோய்ந்து

சூரிய சந்திர ஒளி குளித்து

மாசற்றக் காற்றில் தலைதுவட்ட

வேறு வனங்களையழித்து

புறநகர் பகுதியொன்றில்

ஒவ்வொருவராய் குடியேறிய பின் கிளம்பியது புகார்:

வெளிச்சமில்லை

காற்றில்லை

நீரில்லை

நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்

சண்டைகள்.

நன்றி :  கீற்று

No comments: