முஸ்டியை மடக்கி
பாய்ந்து
முகத்தில்
குத்தச் சொல்கிறது
வெறி கொண்ட மனசு...
எதிரியின் பலம் நினைத்து...
நெஞ்சத்தின் இடுக்கில்
பதுங்கி நிற்கிறது
அச்சப் பூனை...
Monday, 29 June 2009
மனம் - நஜி
என்றோ..
மெல்லிருளில்
பதட்டத்தோடு கண்டெடுத்த
பத்து ரூபாய்..
இடத்தை கடக்கும் போதெல்லாம்
துலாவி துலாவி
திரிகின்றன கண்கள்
எள்ளி நகைக்கிறது
மனம்...
மெல்லிருளில்
பதட்டத்தோடு கண்டெடுத்த
பத்து ரூபாய்..
இடத்தை கடக்கும் போதெல்லாம்
துலாவி துலாவி
திரிகின்றன கண்கள்
எள்ளி நகைக்கிறது
மனம்...
Saturday, 27 June 2009
Tuesday, 23 June 2009
வார்த்தைகள் - நஜி
என்
ஆழ்ந்த மௌன அணையின்
பின்னே..
தளும்பி நிற்கும்
உக்கிர வார்த்தைகள்..
எப்பொழுதாவது
உடைப்பெடுத்து..
காற்றாற்று
வெள்ளமென
அடித்துச் செல்லும்..
சில நேரங்களில் உன்னை..
சில நேரங்களில் என்னை..
சில நேரங்களில் நம்மை..
ஆழ்ந்த மௌன அணையின்
பின்னே..
தளும்பி நிற்கும்
உக்கிர வார்த்தைகள்..
எப்பொழுதாவது
உடைப்பெடுத்து..
காற்றாற்று
வெள்ளமென
அடித்துச் செல்லும்..
சில நேரங்களில் உன்னை..
சில நேரங்களில் என்னை..
சில நேரங்களில் நம்மை..
Monday, 22 June 2009
இது ஹைக்கூ.... வா?????? - நஜி
முழு நிலவு
==================
வானத்
தெரு விளக்கு..
தமிழ்ப் படங்கள்
==================
மறு ஒலிபரப்பு
செருப்பு
==================
கைகளுக்கு...
கால்கள் இல்லாத
பிச்சைக்காரனுக்கு..
==================
வானத்
தெரு விளக்கு..
தமிழ்ப் படங்கள்
==================
மறு ஒலிபரப்பு
செருப்பு
==================
கைகளுக்கு...
கால்கள் இல்லாத
பிச்சைக்காரனுக்கு..
Saturday, 20 June 2009
Monday, 15 June 2009
பகலெனும் ராட்சஸன் - நஜி
Wednesday, 10 June 2009
தன்னழிப்பு - ஆதவன் தீட்சண்யா
சிதைத்த கானகவெளியில்
நீர்நிலைகள் தூர்த்து
நிர்மாணித்த நகரங்களில்
இப்போது
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்
சந்தடியற்று
தனிமையின் அமைதியில் தோய்ந்து
சூரிய சந்திர ஒளி குளித்து
மாசற்றக் காற்றில் தலைதுவட்ட
வேறு வனங்களையழித்து
புறநகர் பகுதியொன்றில்
ஒவ்வொருவராய் குடியேறிய பின் கிளம்பியது புகார்:
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்.
நன்றி : கீற்று
நீர்நிலைகள் தூர்த்து
நிர்மாணித்த நகரங்களில்
இப்போது
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்
சந்தடியற்று
தனிமையின் அமைதியில் தோய்ந்து
சூரிய சந்திர ஒளி குளித்து
மாசற்றக் காற்றில் தலைதுவட்ட
வேறு வனங்களையழித்து
புறநகர் பகுதியொன்றில்
ஒவ்வொருவராய் குடியேறிய பின் கிளம்பியது புகார்:
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்.
நன்றி : கீற்று
முன்னொரு முறை..- நஜி
முன்னொரு முறை..
பிறந்த புதிதில்..
பிரபஞ்ச வீட்டின்..
வாணத் தரையின்..
நீல நிற விரிப்பின் மேல்..
மேகப் பஞ்சணையில்
தலை வைத்து
படுத்துக் கொண்டு
விட்டத்தின்
வட்ட வடிவ
நிலா ஓட்டையின்
வழியே..
வேறொரு
வெள்ளை நிற
சமாதானத்தின்
உலகை
பார்த்திருக்கிறேன்
நான்..
பிறந்த புதிதில்..
பிரபஞ்ச வீட்டின்..
வாணத் தரையின்..
நீல நிற விரிப்பின் மேல்..
மேகப் பஞ்சணையில்
தலை வைத்து
படுத்துக் கொண்டு
விட்டத்தின்
வட்ட வடிவ
நிலா ஓட்டையின்
வழியே..
வேறொரு
வெள்ளை நிற
சமாதானத்தின்
உலகை
பார்த்திருக்கிறேன்
நான்..
Tuesday, 9 June 2009
உதிரிகள் - கலாப்ரியா
இரவில் எடுத்து
வந்து
நன்றாகப் பார்க்கும் முன்
வரும் வழியிலேயே
தைக்கப் போட்டு விட்ட
சட்டைத் துணி
எவ்வாறெல்லாமோ
தினம் தினம்
நினைவுக்கு வரும்
தீபாவளி வரை
நன்றி : http://kalapria.blogspot.com/
வந்து
நன்றாகப் பார்க்கும் முன்
வரும் வழியிலேயே
தைக்கப் போட்டு விட்ட
சட்டைத் துணி
எவ்வாறெல்லாமோ
தினம் தினம்
நினைவுக்கு வரும்
தீபாவளி வரை
நன்றி : http://kalapria.blogspot.com/
Monday, 8 June 2009
Saturday, 6 June 2009
கதவு - கவிக்கோ அப்துல் ரகுமான்
பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன
கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்
கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன
பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல
கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது
கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்
மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது
நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்
ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா
கதவு தட்டும்
ஓசை கேட்டால்
‘யார்' என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன
கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்
கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன
பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல
கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது
கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்
மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது
நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்
ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா
கதவு தட்டும்
ஓசை கேட்டால்
‘யார்' என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்
Wednesday, 3 June 2009
நீரடியில் கொலைவாள் - மனுஷ்யபுத்திரன்
நீரடியில் கிடக்கிறது
கொலைவாள்
இன்று இரத்த ஆறுகள்
எதுவும் ஓடவில்லை
எனினும்
ஆற்று நீரில் கரிக்கிறது ரத்தருசி
இடையறாத
நதியின் கருணை
கழுவி முடிக்கட்டுமென்று
நீரடியில் கிடக்கிறது
கொலைவாள்
நன்றி: உயிர்மை - http://www.uyirmmai.com/
கொலைவாள்
இன்று இரத்த ஆறுகள்
எதுவும் ஓடவில்லை
எனினும்
ஆற்று நீரில் கரிக்கிறது ரத்தருசி
இடையறாத
நதியின் கருணை
கழுவி முடிக்கட்டுமென்று
நீரடியில் கிடக்கிறது
கொலைவாள்
நன்றி: உயிர்மை - http://www.uyirmmai.com/
Subscribe to:
Posts (Atom)