Tuesday 24 November, 2015

Wednesday 29 May, 2013

பால்யத்தின்
நினைவொன்றில்
நகைக்கிறது
மனம்
ஏன்!!!
விடுபட்ட
கணக்கில் ஒன்றை
கழித்துக் கொள்கிறதோ
மகிழ்வின் உலகு!!!

Tuesday 15 February, 2011

உன்

ஒவ்வொரு

லௌகீகத்

தோல்வியிலிருந்தும்

மினுமினுக்கும்

சில வஞ்சகக் கற்களை

சேகரித்துக்

கொள்கின்றாய்...


மெல்லச் சேர்த்த

கற்கள் கொண்டு

விசப் படிகள்

அமைத்து

ஓராயிர உழைப்புகளை

அலட்சித்து

ஏறி

உச்சாணியில்

அமர்ந்து

கொள்கின்றாய்...


தடை கற்களை

படி கற்களாக்கியவன்

என்று உலகமே

வியந்து போற்றுகிறது

உன்னை...

என் மயிருக்கு சமம்

என்கின்றேன்

நான்...



Tuesday 25 January, 2011

ஒற்றைக் கொக்கு

ஜாம

வானக் கடலின்

கீழே...

நினைவினில்

கூடு

மறந்து...

பதறிக் கமறி

அலைந்து கடக்கும்

ஒற்றைக் கொக்கின்

துயருக்கான

எனது இரக்கத்தை

யார் கொண்டு சேர்ப்பது

அதனிடத்தில்???

Sunday 12 December, 2010

அமானுக்ஷ்யம்




சூனிய
இருப்பொன்றில்
எனக்கு முன் தோண்றிய
அமானுக்ஷ்யம் ஒன்று
என்னிடம்
உரக்கக் கேட்டது
என்ன செய்து
கொண்டிருக்கிறாய் என்று...

ஏதுமற்ற வார்த்தைகளோடு...
அதையே
உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தேன்
நான்...




அற்புத வாழ்க்கை...


அற்புத
வாழ்க்கைக்கான
எல்லா
வாசல்களும்
திறந்தே
இருக்கின்றன...
என்
உடல்
முழுக்க
சங்கிலியால்
பிணைக்கப்
பட்டிருக்கின்றது...

Tuesday 19 October, 2010

நாத்திகம் - நஜி


இரத்தம் வறண்டு...

வெடிப்புற்ற தோல்களோடு...

மரணத்தை சுமந்தலையும்

முதுமையில்...

எண்ணங்களின்

சூனியக்குழியை...

கேள்விகளற்ற

ஆன்மீகத்தால்...

அள்ளி அள்ளி நிரப்புவான்

மனிதன்

நாத்திகம் மறந்து

அல்லது

மறைத்து...


Thursday 14 January, 2010

வெறித்தல்...

வெறித்தல்...


சட்டென

வெறித்த பார்வையில் நின்றும்

வழிந்தோடுகின்ற

நினைவுகள்!!!

பனித்துளிகளாய்...

இரத்தங்களாய்...

தாகத்தண்ணீராய்...

முடிவுற்ற

காமத்தின் கடைசித் துளியாய்...